Tuesday, 31 July 2012

ஆரியன் திருடிய, தமிழர் பண்பாடு...

          நாம் இப்போது பயன்படுத்தும் வட(ஆரிய) மொழி கலப்பு வார்த்தைகள் எப்படி தமிழ் மொழியை அசிங்கம் செய்கின்றனவோ, அதே போல நமது பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடுகளும் ஆரிய கலப்பால் கேளிக்கூத்தாகின்றது. ஆதியில் நாம் பின்பற்றிய பழக்கங்கள் அனைத்துக்குமே ஒவ்வொரு காரண காரியம் உண்டு. மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்ததில் இருந்து ஆடை அணியும் முறை வரை அனைத்துமே நமது தட்ப வேட்ப நிலையை கருத்தில் கொண்டும் நாம் வாழும் பகுதிக்கு ஏற்றார்ப்போல் வாழ்க்கை முறையை வகுத்து வாழ்ந்துள்ளோம். நாம் பின்பற்றிய வாழ்வியல் முறைகளை ஆரியன் அவனது கவர்ச்சியை புகுத்தி அதன் மயக்கத்தில் நம்மை கிடத்தி பின் நமக்குள் பயத்தினை உண்டுபண்ணி நமக்கான வாழ்வியல் முறையையே அவனுடைய பிழைப்புக்கான சூத்திரத்தினையும் சேர்த்து நம்மிடமே கொண்டுவந்து மூடனாக்கிவிட்டான். ஒரு சில விடயங்களை பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கு எழுதியுள்ளேன்.

Thursday, 12 July 2012

தமிழா, முன்னேறு தமிழோடு...

தாயை நேசிக்காதவனே,
தாய் மொழியையும் நேசிக்கமாட்டான்..

நம் பழந்தமிழர்கள் பயன்படுத்திய தமிழர் வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்றினால் போதும் நமக்கான வளர்ச்சியும், இன்பமும் என்றும் நம்முடன் இருக்கும். இயற்க்கையை நேசித்த நம் பாட்டனார்கள், மரங்களை பாதுகாத்து காட்டிலேயே வாழ்க்கை நடத்தியுள்ளனர். காட்டில் கிடைக்கும் காய் கனிகளை உண்டும், மூலிகைகளை பயன்படுத்தி நோய் நீக்கியும், இனிய காற்றினை சுவாசித்தும் வாழ்ந்துள்ளனர்.