மசூதிகளில் தொழுகை
துவங்கியது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. முந்தாநாள் உயிர் விட்ட மேய்ப்பர் ஒருவர்
இன்று உயிர்த்தெழுவதை காண மக்கள் பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்தனர்.
திருமங்கலம்-மதுரை. எனது வாழ்நாளில்
நான் அதிகம் பயணித்துக்கொண்டிருக்கும் சாலை இது. பால்யத்தில் அம்மா வழி உறவு வீடுகளுக்கு
செல்வதில் துவங்கி இன்று பசுமைநடைக்கான பயணம் வரை கணக்கிலடக்க இயலாது. மறாங்குளம் என
சொல்லப்படும் மறவன்குளம் ஊரும் அதன் கண்மாயும் நீர் நிறைந்து ஓவியமாக இருந்தது மனதில்
இலையாடுகிறது. இந்த நான்கு வழிச் சாலைகளின் வருகையால் மறவன்குளம் கண்மாய் இரண்டாய்
பிளந்து போனது. மெட்டல் பவுடர் கம்பெனியை கடக்கையில் அங்கு நிகழும் விபத்து குறித்தான
தகவல்கள்தான் பயமுறுத்தும். முன்னொருகாலத்தில் இந்த பகுதியில் நிகழ்ந்ததாக சொல்லப்படும்
வழிப்பறியை கப்பலூர் சுங்கச்சாவடி நியாபகமூட்டியது.
குன்றத்து கண்மாயில்
இருந்து குளிர்ந்த காற்று முகத்தில் மோதிக் கொண்டிருந்தது. அதன் பிறகு சாலை குண்டும்
குழியுமாக தொடர சிந்தனைக்கு இடைவேளை விட்டு நிகழ்காலத்திற்கு வந்திறங்கினேன். பசுமலையில்
சிற்பிகளும் சிற்பங்களும் இந்நேரத்திலேயே உரையாடி உறவாட துவங்கிவிட்டனர். தோரண வாயில்
வழி மதுரையினுள் நுழைந்துகொண்டிருந்த போது வானம் எங்கிருந்தோ சூரிய கதிரின் பிம்பத்தினை
வெளிப்படுத்தத் துவங்கியது. வாகனத்தின் முகப்பு விளக்கை அணைத்துவிட்டு பழங்காநத்தம்
கடந்து மதுரைக் கல்லூரியின் பாலம் ஏறியது எனது வாகனம். உறங்கா நகரம் எந்த ஒரு சோம்பலும்
இன்றி இயங்கியபடியே இருந்தது. காலைப்பொழுதாக இருந்ததால் வாகன நெரிசலற்று எந்த ஒரு இடத்திலும்
தனது வேகம் குறையாமல் பெரியார் நிலயத்தினை கடந்து நேதாஜி சாலை வழியை பிடித்தது.
நகைகடைகளின் வாசலில்
படுத்திருத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கண் விழித்து என் வாகனத்தினை நோட்டமிட்டுக்
கொண்டிருந்தனர். மீனாட்சி கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள நந்தி சிலையை கடந்து சென்ற
எனது வாகனம் கட்டிட நிழல் விழும் என்று நான் கணித்த இடத்தினில் நின்றது.
கிழக்கில் துவங்கி
கிழக்கிலேயே நிறைவு செய்தோம். கிழக்கு கோபுரத்தின் முன் உள்ளது புது மண்டபம் என்று
சொல்லப்படும் வசந்த மண்டபம். இன்றைய பசுமைநடை நிகழ்வுக்கான கரு இதுதான்.
பள்ளியில் படித்த
காலங்களில் கோனார் தமிழ் உரை வாங்கிட நண்பர்களோடு வந்திருக்கிறேன். அதன் பிறகு அக்காவின்
திருமணத்திற்கு குத்துவிளக்கு வாங்க வந்துள்ளேன். அதற்கடுத்து பனியாரச்சட்டி, வடச்சட்டி
என ஒவ்வொன்றுக்கும் இங்குதான் வந்துள்ளேன். அப்போதெல்லாம் கடிவாளம் கட்டப்பட்ட குதிரையாக
இருந்ததால் இந்த மண்டபத்தின் முகப்பில் உள்ள குதிரை சிற்பங்கள் கூட கண்களில் பட்டதில்லை.
சாந்தலிங்கம் அய்யா
அவர்களது உரை அந்த வசந்த மண்டபத்தின் வசந்த காலத்திற்கு இட்டுச் சென்றது.
சங்க இலக்கியங்களில்
ஆலவாய் அண்ணல் கோவில், ஆலவாய் சொக்கர் என்று தான் பாடப்பட்டுள்ளது. எனவே மதுரையின்
இந்த பகுதி சங்க காலங்களில் ஆலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது புலனாகிறது. “அங்கயற்கன்னியுடன்
உறையும் ஆலவாய் அண்ணலே” என்று மீனாட்சிக்கு அழகான தமிழ் பெயரை பயன்படுத்தி சங்க இலக்கிய
பாடல்கள் பாடப்பட்டுள்ளது.
12- ஆம் நூற்றாண்டில்
முதன் முதலாக கிழக்கே உள்ள கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது சுந்தபாண்டியன் கோபுரம் என
சொல்லப்படுகிறது. மேற்கே உள்ள கோபுரம் பராக்கிரம பாண்டியன் காலத்தில் 1336ல் கட்டப்பட்டுள்ளது.
தெற்கே உள்ள கோபுரம் செவ்வந்தி முதலியார் அவர்களால் கட்டப்பட்டது. 1583-ல் வடக்கே உள்ள
கோபுரம் வீரப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதுமண்டபம்
வசந்தகாலத்தில் வெயிலில் இருந்து இளைப்பாற அமைக்கப்பட்ட மண்டபம். இந்த மண்பத்தினை சுற்றி
தண்ணீர் ஓடிக் கொண்டு குளிர்ந்த தன்மைக்காக அமைக்கப்பட்டுள்ளது.
தடாதகைப்பிராட்டி
எனச் சொல்லப்படும் மும்முளை அம்மன் சிற்பம் இந்த மண்டபத்தில்தான் அமைந்துள்ளது. இந்த
அம்மன்தான் மீனாட்சியம்மன். மலையதூச பாண்டியனுக்கும் காஞ்சரமாலா என்கிற அரசிக்கும்
பிறந்த இந்த தடாதகைப்பிராட்டி மூன்று மார்புகளுடன் பிறந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பின்னாட்களில்
வெள்ளையர் காலத்தில் இந்த மண்டபம் முதல் நூலகமாகவும், அருங்காட்சியகமாகவும் செயல்பட்டுள்ளது.
என இந்த வசந்த
மண்டபம் குறித்த பல தகவல்களை விவரித்தார்.
யாருமே அனுமதிக்கப்படாத
இந்த மண்டபத்தினுள் பசுமைநடை தன்னார்வளர்களுக்கு அனுமதியளித்த கோவில் நிர்வாக துணை
ஆணையர் அவர்களும் இந்த இடத்தினை எங்களுக்காக தூய்மை செய்து கொடுத்த பணியாளர்களும் நன்றிக்குறியவர்கள்.
புது மண்டபத்தில் உள்ள அழகான சிற்பங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. ஏகபாதமூர்த்தி
2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி
3. குதிரை வீரர்கள்
4. கஜயுகர்
5. தடாதகைப் பிராட்டியார்
6. சூரியன்
7. புலிக்குப் பால்கொடுத்தது
8. பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தது
9. சந்திரன்
10. சுந்தரேஸ்வரர்
11. துவாரபாலகர்கள்
12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)
13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை
14. கருங்குருவிக்கு உபதேசம்
15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்
16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது
17. பதஞ்சலி
18. வியாக்ரபாதர்
19. பத்ரகாளி
20. ஊர்த்துவ தாண்டவர்
21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி
22. பிரம்மா
23. தேவேந்திரன்
24. அர்த்த நாரீஸ்வரர்
25. சங்கர நாராயணர்
26. அதிகார நந்தி
27. கைலாச பர்வதம்
28. திரிபுரஸம்ஹாரம்
1. ஏகபாதமூர்த்தி
2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி
3. குதிரை வீரர்கள்
4. கஜயுகர்
5. தடாதகைப் பிராட்டியார்
6. சூரியன்
7. புலிக்குப் பால்கொடுத்தது
8. பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தது
9. சந்திரன்
10. சுந்தரேஸ்வரர்
11. துவாரபாலகர்கள்
12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)
13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை
14. கருங்குருவிக்கு உபதேசம்
15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்
16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது
17. பதஞ்சலி
18. வியாக்ரபாதர்
19. பத்ரகாளி
20. ஊர்த்துவ தாண்டவர்
21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி
22. பிரம்மா
23. தேவேந்திரன்
24. அர்த்த நாரீஸ்வரர்
25. சங்கர நாராயணர்
26. அதிகார நந்தி
27. கைலாச பர்வதம்
28. திரிபுரஸம்ஹாரம்
ஒவ்வொரு சிற்பமும்
அதன் நுண் கலை வேலைப்பாடுகளும் மெய் சிலிர்க்கச் செய்தது. குறிப்பாக அந்த சிற்பங்களில்
செதுக்கப்பட்டிருந்த ஆடைகளின் பூ வேலைப்பாடுகளும், கொண்டை முடியும், முகத்தில் காட்டப்பட்டுள்ள பாவங்களும் அவ்வளவு அருமை. கண்கொட்டாமல் அவற்றையே கண்டு களிக்கவே மனம் சொல்லிற்று. ஆனால்
நேரம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
திருமலைநாயக்கரால்
துவங்கப்பட்டு பிறகு முழுமையடையாமல் விடப்பட்ட ராய கோபுரமும் அதன் சிற்பங்களும் வீதிகளில்
வீசி எரியப்பட்டதைப் போன்று கிடக்கிறது. அரசாங்கங்களின் சமூக பொறுப்புணர்ச்சி காரணமாக
உயர்த்தப்பட்ட தார் சாலைகள் பல சிற்பங்களை தின்று விழுங்கிவிட்டது.
தொல் எச்சங்களை
பாதுகாப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதில்லை.
வெறும் பக்தியாக மட்டுமே சிற்பங்கள் மதிக்கப்படுகின்றன. அதனால்தான் கருவரையில் உள்ள
சிற்பங்கள் வணங்கப்பட்டும் இது போன்ற சிற்பங்கள் பொருட்டாக மதிக்கப்படுவதும் கூட இல்லை.
அன்பும் நன்றியும்
பாடுவாசி ரகுநாத்.
paaduvaasi@gmail.com
thamizhmani2012@gmail.com
சங்க இலக்கியங்களில் ஆழவாய் அண்ணல் கோவில், ஆழவாய் சொக்கர் என்று தான் பாடப்பட்டுள்ளது. எனவே மதுரையின் இந்த பகுதி சங்க காலங்களில் ஆழவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது புலனாகிறது. “அங்கயற்கன்னியுடன் உறையும் ஆழவாய் அண்ணலே//
ReplyDeleteஆழவாய் அல்ல நண்பா! ஆலவாய். ஆலவாய் என்றால் நீர்நிலைகள் சூழ்ந்த பகுதி என மயிலை.சீனி.வேங்கடசாமி கூறுகிறார். வாடிப்பட்டி செல்லும் வழியில் திருவாலவாயநல்லூர் என்னும் ஊர் உள்ளது. இன்று அது நான்கு வழிச்சாலையில் நசுங்கி டி.வி.நல்லூர் என பதாகை வைத்திருக்கிறார்கள்.
தாங்கள் குறிப்பிட்ட தவறுகளை சரி செய்துவிட்டேன் நண்பரே. மிக்க நன்றி :-)
Delete