Tuesday, 11 December 2012

பூக்காரம்மா...

மகாகவி பிறந்த தினத்தில் பெண் அடிமைத்தனத்தினை தீயிடுவோம் 
பூக்காரம்மா...

Sunday, 2 December 2012

மரணமடையும் மனிதம்



கொலை செய்தால் கொலைதான் தண்டணை என்றால்- தண்டனையாக கொடுக்கப்பட்ட கொலைக்கு என்னதான் தண்டணை? #தூக்கினை தூக்கில் ஏற்றுங்கள்.” –இது நான் காசாப் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அன்று என் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. ஏகப்பட்ட எதிர்ப்பு குறுஞ்செய்திகள் என் அலைபேசியில் வந்து குவிந்துவிட்டன. “160 மனிதர்களை கொன்று குவித்தவனை மன்னித்து விட சொல்கின்றாயா?” என்றும்- “ அவனை உயிரோடு விட்டால் இன்னும் பல மனித உயிர்கள் அவனால் பலியாகும்” என்றும்- நீ என்ன அந்த தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டாயா?” என்றும் மாறி மாறி கேள்விகள். நானும் எனக்கான பதிலை கூறாமல் இல்லை. அவர்கள் எனது விளக்கத்தினை ஏற்க கூடிய மன நிலையிலும் இல்லை. இதோ இப்போது இதனை படித்துக்கொண்டிருக்கும் உங்களில் பெரும்பாலானோர் என் விளக்கத்தினை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதும் கூட எனக்குத் தெரியும்.