என்னமோ தெரியவில்லை
இப்பொழுதெல்லாம் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகின்றன. ஆனால் அந்த
படங்கள் பெரும்பாலான மக்கள் மத்தியில் அவ்வளவாக பேசப்படுவதில்லை. ஒன்றுக்கும் ஆகாத
இந்த காதல் திரைப்படங்களுக்கும்- “என்னதான் சொல்ல வர்ரானுக”னு புலம்ப வெக்கின்ற அடிதடி
திரைப்படங்களுக்கும் இருக்கின்ற வரவேற்ப்பு சமூக அக்கறை கொண்ட படங்களுக்கு சற்று
குறைவாகவே இருக்கின்றது. இந்த நிலையிலும் சாட்டை போன்ற திரைப்படங்கள் இப்பொழுதும்
வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையான கலைஞனுக்குள்ளும் இன்னும்
சமூகத்தின் மீதான அக்கறையும் எதையும் (லாபம்) எதிர்பார்க்காத தன்மையும்
குறையவில்லை என்பதனையே இது காட்டுகின்றது. சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை அடித்து
விலாசி எடுக்கும் திரைப்படங்களின் வரிசையில் “சாட்டை”க்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
Friday 9 November 2012
Friday 2 November 2012
கும்பாபிஷேகம் எதற்காக??
நமக்கு நமது அப்பாவின் பெயர்
தெரிந்திருக்கும். அப்பாவினுடைய அப்பாவின் பெயரும் கூட ஓரளவுக்கு
தெரிந்திருக்கும். அவருடைய அப்பாவின் பெயரோ, அவரது பாட்டையாவின் பெயரோ நம்மில்
எத்தனை பேருக்கு தெரியும்??
சுமார் நூறு ஆண்டுகளுக்கு
முன் எனது அப்பாவை பெற்ற அப்பாவினுடைய பாட்டையா, நாங்கள் இப்போது குடியிருக்கும் ஓட்டு
திண்ணை வீட்டினை கிரயத்திற்கு வாங்கியுள்ளார். அந்த கிரய பத்திரங்களை எங்கள் வீட்டின்
வயது முதிந்தவர்களின் உதவியுடன் படிக்கும் போது ஏழு தலைமுறையினரின் பெயர்களையும்
இப்போது அவர்களின் சந்ததிகள் எங்கெல்லாம் பிரிந்து பரவி வாழ்கின்றார்கள்
என்பதையும் அறிந்து கொண்டேன். உண்மையில் வரலாறு என்பது தேடும்போதும் சரி அதனை
அறிந்து கொள்ளும் போதும் சரி ஒரு இனம் புரியாத ஆர்வமும் மகிழ்ச்சியும் மனதை
கவ்விக்கொள்கின்றது.
Subscribe to:
Posts (Atom)