Sunday 28 April 2013
Friday 19 April 2013
மை பேனா...
அனா ஆவணா கற்க
துவங்கிய காலம் அது.. விவரம் அறியாத அந்த வயதில் என்ன படித்தோம்; எப்படி புரிந்துகொண்டோம்
என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். இருந்தாலும் அப்போது கற்ற தாய்மொழி அறிவு இன்று
வரை வற்றிப்போனது இல்லை. இதுதான் தாய்மொழியின் சிறப்பு போலும். (ஒன்றாம் வகுப்பினில்
இரண்டு முறை உட்கார்ந்து அடித்தளம் உறுதியாக போட்டதும் கூட காரணமாக இருக்கலாம்.) சிலேட்
குச்சி பயன்படுத்தி எழுதிய நாட்களில் பென்சில் கொண்டு எழுத வேண்டும் என ஆவல் தூண்டும்.
பென்சில் பிடித்து எழுத துவங்கும் போது தான் குச்சி திங்க முடியாமல் போன கவலை தொற்றிக்
கொண்டது. இருப்பினும் பென்சிலின் முனையை கடித்து கடித்து வைத்த காலங்களும் உண்டு.
Sunday 14 April 2013
மழலைகள்
நேற்றைக்கு போவேன் என்பாய்;
நாளைக்கு போனேன் என்பாய்
காலப்பந்தாடும் காலன் நீ;
ஞாலம் கவரும் காமன் நீ.
நாளைக்கு போனேன் என்பாய்
காலப்பந்தாடும் காலன் நீ;
ஞாலம் கவரும் காமன் நீ.
Subscribe to:
Posts (Atom)