பார்வையற்றவர்கள் என்ற வார்த்தையை பொய்யாக்கியிருக்கிறது குக்கூ. இந்த திரைப்படத்தினை கண்ட எனக்கு அந்த
வார்த்தையை உச்சரிக்க வாய் கூசுகிறது, எழுத கை கூசுகிறது. உண்மையில் நாம் தான் அவர்களின்
உலகத்தை காண முடியாத, அவர்கள் ரசிக்கும் வண்ணங்களை ரசிக்க இயலாத பார்வையற்றவர்களாக சுற்றித் திரிகிறோம். அவர்களை
மாற்றுப்பார்வையுள்ளவர்கள் என எழுதுவதும் பேசுவதும் மட்டுமே சரியாக இருக்கும். இந்த
உண்மையை உரக்க சொன்னதற்காக குக்கூவுக்கும் அந்த ஓவியத்தினை திறம்பட தீட்டிய அறிமுக
இயக்குனர் ராஜூமுருகனுக்கும்