Friday 26 October 2012

பெண்கள் மத்தியில் பெண்ணியம்...


சமையலறைக்கு வாக்கப்பட்ட பெண்கள்- இப்போது அந்த சமையலறையை விவாகரத்து செய்ய துவங்கி வருகின்றனர். இது சரியா? தவறா? சரி என்றால்- யார்தான்  அடுத்து சமைப்பது? தவறென்றால்- ஏன் ஆண்களும் சமைக்க கூடாது? அது பெண்ணுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியா? இல்லை சமையல் செய்வதுதான் பெண்களின் தொழிலா? வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டுமா? கட்டிலறையும்- சமையலறையும் மட்டும் தான் பெண்களுக்கானதா?

இதைப்படித்ததும் இது என்ன முட்டாள்தனமான கேள்வியாக இருக்கின்றது என்றோ? இந்த கேள்விகளுக்கான எதிர்ப்பு பதில்களை உங்கள் மனம் தேட துவங்கியிருந்தாலோ- நீங்களும் ஒரு ஆணாதிக்கவாதி என்பதனை ஏற்றாக வேண்டும்.

ஆதியில் விவசாயத்தினை கண்டுபிடித்த பெண்களின் தன்மைகள் இன்று பல ஆக்கப்பூர்வ சிந்தனைகளை தனக்குள் பூட்டி வைத்திருக்கும் பெண்களின் தன்மைகளோடு ஒத்துப்போகின்றது.

பெண்ணியம், பெண் சுதந்திரம் குறித்த கருத்துகள் மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையில் பெண்கள் பெண்ணியம் குறித்து புரிதலில் இருக்கின்றனரா? பெண் சுதந்திரம் பெண்களிடம் எந்த அளவில் சென்றடைந்துள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை ஒரு சிறு கள ஆய்வு மூலம் அறிந்து கொள்ள நினைத்தேன்.

Wednesday 17 October 2012

காணாமல் போன மின்சாரம்...



என் சிறுவயதில் எப்பொழுதாவது இரவு நேரங்களில் எங்கள் தெருவில் மின் தடை ஏற்படும். மின் தடையானாலும் சரி மின் தடை நீங்கி வெளிச்சம் வந்தாலும் சரி ஒரு பேரிறைசலால் அந்த நொடியில் தெருவே அலரும். அந்த இனிமையான பேரிறைச்சலையோ, இருளில் விளையாடும் ஐஸ் விளையாட்டினையோ, இப்போதைய வாண்டு பட்டாளங்களிடம் காண்பது அரிதாகிப்போனது. நம் குழந்தைகளின் சுதந்திரம் பரிபோனது ஒரு காரணமாக இருந்தாலும் எப்பொழுதாவது மின் தடை ஆனால் தானே!! அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எப்பொழுதுமே இதே நிலையாய் இருந்தால் எதிர்ப்புதானே வரும், வாண்டுகளுக்குமே.