
ரம்மியமான கிராமத்தின்
அமைதியை ஆங்காங்கே குயில்களும் சிறு பறவைகளும் சலனப்படுத்திக் கொண்டிருந்த அதிகாலைப்
பொழுதினில் மலை அடிவாரத்தில் பசுமைநடை நண்பர்கள் கூடினோம்.
வயிற்றுக்கு இரை தேட மரக்கிளைகளில்
இருந்து பறவைகள் கிளம்பிக்கொண்டிருந்தன. வரலாற்று இரை தேடி மலை ஏற நாங்களும் ஆயத்தமானோம்.
மலை அடிவாரத்தில் இருந்த அய்யனார் கோவில் தன் தொன்மையை இழந்து கும்பாபிஷேகம் கண்டு- ஆரிய சின்னங்கள் மினு மினுத்திருந்தன. தோழர்.இளஞ்செழியன் அவர்கள் அங்கே சுட்டிக்காட்டிய பூணுல் அடையாளங்களும் என் அக்காவின் குல தெய்வ ஆலயத்தில் நடந்த கும்பாபிஷேகமும் தான்
நான் “கும்பாபிஷேகம் எதற்காக?” என்ற இடுகையை இட காரணமாய் இருந்தது.
www.thamizhmani2012.blogspot.in/2012/11/blog-post.html
கீழக்குயில்குடி
சமணர் மலை எங்களை சுமக்க தயாரானது. நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக கை கொடுத்து மேலேரினோம்.
சமண தீர்த்தங்கரர்களான பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் போன்றோர்களின் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்கள் வரலாற்று சான்றாக நின்றிருந்தன.
பசுமைநடை நிறுவனர்.
எழுத்தாளர்.அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் மலையை பற்றி அறிமுக உரை கொடுத்தார். அவரைத்தொடர்ந்து
தொல்லியல் அறிஞர் அய்யா.சாந்தலிங்கம் அவர்கள் சமணமலையை பற்றி விவரிக்க தொடங்கினார்.


மேலே சமண தீர்த்தங்கரர்களுக்கு
தேனுரை சேர்ந்த ஒருவர் ஏற்ப்படுத்திக்கொடுத்த சமணப்படுக்கை தனக்கான வரலாற்றை பாறைகளில் பதித்தபடி
சாய்ந்திருந்தது. அதன் தொன்மையை அய்யா.சாந்தலிங்கம் விளக்கமளித்தார், தகவல்களை காதிலும் அலைபேசியிலும் சேமித்துவிட்டு வந்த திசையில்
திரும்பி மலை இறங்க ஆயத்தமானோம்.
அவ்வளவுதான!!! என
மனம் ஏங்க துவங்கிய தருணத்தில் நண்பர் ஒருவர் “அப்படியே செட்டிப்புடவையும் கண்டுவிடலாமே”
என திரி கொளுத்திப்போட்டர். விடுவோமா என்ன!!! அங்கும் பயணமானோம் நடந்தே…
வழக்கமான காலை
சிற்றுண்டி வழக்கத்தினை விட அதிகமாகவே சுவைத்தது. கண்களுக்கும் செவிகளுக்கும் கிடைத்த
விருந்து போலவே வாயிற்க்கும் வயிற்றிற்கும் கிடைத்தது..
கொசுரு:-
ஒழுக்கத்தினையும், அடுத்த உயிரை துன்புறுத்தாத மனதினையும் மட்டுமல்ல இன்னும் என்ன என்னவோ இந்த சமணர்களிடம்
இருந்து நாம் கற்க வேண்டியுள்ளது. சமணர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள மயிலை.சீனிவெங்கடசாமி
அவர்கள் ஆராய்ந்து எழுதியள்ள “சமணமும் தமிழும்” என்ற நூலினை படியுங்கள்.
ஆரியம் வீழ்த்திய சமணத்தினை மீட்டெடுப்போம்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
ஆரியம் வீழ்த்திய சமணத்தினை மீட்டெடுப்போம்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
No comments:
Post a Comment