Friday, 26 October 2012

பெண்கள் மத்தியில் பெண்ணியம்...


சமையலறைக்கு வாக்கப்பட்ட பெண்கள்- இப்போது அந்த சமையலறையை விவாகரத்து செய்ய துவங்கி வருகின்றனர். இது சரியா? தவறா? சரி என்றால்- யார்தான்  அடுத்து சமைப்பது? தவறென்றால்- ஏன் ஆண்களும் சமைக்க கூடாது? அது பெண்ணுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியா? இல்லை சமையல் செய்வதுதான் பெண்களின் தொழிலா? வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டுமா? கட்டிலறையும்- சமையலறையும் மட்டும் தான் பெண்களுக்கானதா?

இதைப்படித்ததும் இது என்ன முட்டாள்தனமான கேள்வியாக இருக்கின்றது என்றோ? இந்த கேள்விகளுக்கான எதிர்ப்பு பதில்களை உங்கள் மனம் தேட துவங்கியிருந்தாலோ- நீங்களும் ஒரு ஆணாதிக்கவாதி என்பதனை ஏற்றாக வேண்டும்.

ஆதியில் விவசாயத்தினை கண்டுபிடித்த பெண்களின் தன்மைகள் இன்று பல ஆக்கப்பூர்வ சிந்தனைகளை தனக்குள் பூட்டி வைத்திருக்கும் பெண்களின் தன்மைகளோடு ஒத்துப்போகின்றது.

பெண்ணியம், பெண் சுதந்திரம் குறித்த கருத்துகள் மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையில் பெண்கள் பெண்ணியம் குறித்து புரிதலில் இருக்கின்றனரா? பெண் சுதந்திரம் பெண்களிடம் எந்த அளவில் சென்றடைந்துள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை ஒரு சிறு கள ஆய்வு மூலம் அறிந்து கொள்ள நினைத்தேன்.

Wednesday, 17 October 2012

காணாமல் போன மின்சாரம்...



என் சிறுவயதில் எப்பொழுதாவது இரவு நேரங்களில் எங்கள் தெருவில் மின் தடை ஏற்படும். மின் தடையானாலும் சரி மின் தடை நீங்கி வெளிச்சம் வந்தாலும் சரி ஒரு பேரிறைசலால் அந்த நொடியில் தெருவே அலரும். அந்த இனிமையான பேரிறைச்சலையோ, இருளில் விளையாடும் ஐஸ் விளையாட்டினையோ, இப்போதைய வாண்டு பட்டாளங்களிடம் காண்பது அரிதாகிப்போனது. நம் குழந்தைகளின் சுதந்திரம் பரிபோனது ஒரு காரணமாக இருந்தாலும் எப்பொழுதாவது மின் தடை ஆனால் தானே!! அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எப்பொழுதுமே இதே நிலையாய் இருந்தால் எதிர்ப்புதானே வரும், வாண்டுகளுக்குமே.

Saturday, 29 September 2012

சக்கையானாலும் சகித்துக்கொள்...

நான் மதுரைக்கு செல்லும் பொழுதெல்லாம்  அதிகமான சமயங்களில் காளி மார்க், பவண்டோ விரும்பி அருந்துவது வாடிக்கை. கோடை காலத்தில் என் பிரத்யோக பானம் கரும்பு சாறு. நாம் போய் கேட்டவுடன் நாமக்காக சீவி சிங்காரித்து இருக்கும் கரும்பினை, கரும்பு ஆட்டும் இயந்திரத்தில் இரு இரும்பு உருளைகளுக்கு நடுவில் விட்டு பிழிந்தெடுத்து சாறு சேகரிப்பார்கள் அப்படி சேகரிக்கும் போது ஒரு முறையோடு நிறுத்திவிடாமல் சுமார் நான்கு ஐந்து முறையும், நீர் சத்து அதிகம் உள்ள கரும்பு எனில் அதற்கும் மேல் அதனை (ஆட்டி) பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அந்த  கரும்பு இரு உருளைகளுக்கு நடுவில் தலையை விட்டு வெளியே சக்கையாகி வரும் போது அவ்வளவு தானோ என மனம் நினைக்கும் ஆனாலும் மறுபடி மறுபடி அதை திணித்து எடுக்கும் போதும் அதிலிருந்து சாறு கொட்டிய வண்ணமே இருக்கும். நாம் கொடுக்கும் விலைக்கான சாற்றினை கண்ணாடி குவளையில் எப்படியோ பிழிந்து நிறைத்து கொடுத்துவிடுகிறார்கள்.

Friday, 7 September 2012

உயிர் பெற்ற இருபது சடலங்கள்...

          தீபாவளி என்பது தமிழனுக்கான பண்டிகை கிடையாது. ஆனால் திபாவளிக்கு கொளுத்தி மகிழும்  பட்டாசு, வான வேடிக்கை, மத்தாப்பு போன்றவற்றை தொண்ணுறு விழுக்காடு இந்தியாவுக்கு வழங்குவது தமிழகம் மட்டுமே. குறிப்பாக கரிசல் காட்டு மண் சிவகாசி தான் இதன் மூலதனம். ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் தங்களது தகுதியையும் காட்ட பயன்படுத்துவது இந்த பட்டாசுகளை தான். ஆரம்ப காலத்தில் சப்த்தம் அதிகமான பட்டாசுகள் தான் பணம் படைத்தவர்களால் விரும்பப்பட்டு வந்தது. அதனை கண்டு இல்லாதோரும் தங்கள் குறைந்த பண சக்திக்கு தக்க தன் பிள்ளைகளுக்கு குறைந்த சப்த்தம் வரக்கொடிய ஓலை வெடி, வரி வெடி, சீனி வெடி எனப்படும் பிஜிலி வெடி போன்றவற்றை வாங்கி கொடுத்து இல்லாத இன்பத்தை இதில் தேடினர்.