இம்முறை (23-11-2014) பசுமைநடை பயணம் மாங்குளம்-மீனாட்சிபுரம்
சிற்றூர் மலைக்கு. பசுமைநடை பயணம் வீட்டிலிருந்தே
துவங்கியது. சற்றே விடிந்து கொண்டிருந்ததை பறவைகளின் கும்மாளம் ஊருக்கே சொல்லிக் கொண்டிருந்தது.
Tuesday, 25 November 2014
மண் மணக்கும் மாங்குளம்
Monday, 17 November 2014
வேளாண் பயணம் – மாங்குளம் சிற்றூர்
மதுரையில் உள்ள மலைகளுக்கு பயணித்து
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எனச் சொல்லப்படும் தமிழி கல்வெட்டுகளை, சமண சிற்பங்களை, படுக்கைகளை, பாறை ஓவியங்களை குழுவாக
கண்டும் ஆவணப்படுத்தியும் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும்
பசுமைநடையின் அடுத்தகட்ட நகர்வு வேளாண் சிற்றூர் பயணம்.
23-11-2014 அன்று 42-வது பசுமைநடை
நிகழவிருக்கும் மாங்குளம் சிற்றூரில் 16-11-2014 அன்று வேளாண் பயணம்.
மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு
செல்லும் சாலையில் கள்ளந்திரி சிற்றூரில் இருந்து வலதுகைப் பக்கம் திரும்பிதும் 7 கிலோமீட்டர்
தொலைவிற்குள் அமைந்திருக்கிறது மாங்குளம் சிற்றூர். வழக்கமான பசுமைநடை நேரத்தில்(காலை
6:00 மணி) மதுரையில் இருந்து நான், அண்ணன் முத்துச்செல்வக்குமார் மற்றும் நண்பர் ஜெயவேல்
ஆகிய மூவரும் பயணிக்கத் துவங்கினோம். கள்ளந்திரியில் இருந்து
Tuesday, 11 November 2014
மரண வீட்டின் வாசம்
மரணம் ஏற்படாத வீடுகள் இங்கு எதுவும்
இல்லை. எனது வீடும் அதற்கு விதிவிலக்கு இல்லை. எனது பிறப்பிற்கு பின் எனது தாய் வழியில்
இரு தலைமுறைகளின் மரணத்தினை கண்டிருக்கிறேன். எனது அம்மாவினுடைய அம்மா மற்றும் அவருடைய
அம்மா. எனது தந்தை வழியிலும் இரு தலைமுறை மரணங்களை கண்டிருக்கிறேன். எனது அப்பாவினுடைய
அப்பா மற்றும் எனது அப்பா. எனக்கு விவரம் அறிந்து நான் கண்ட முதல் மரணம் எனது அப்பாவின்
அப்பாவினுடையது.
ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த
நாட்கள் அது. எனது அய்யப்பாவை (அப்பாவினுடைய அப்பாவை) ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்து
கொண்டு வந்திருந்த நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள்.
Monday, 13 October 2014
மழையோடு ஒரு மலை விழா
பசுமைநடை எனும் பெயரில் ஒரு வரலாற்றுப்
புரட்சி...
ஆதித் தமிழன் வாழ்வு தமிழி எழுத்துருவிலும்
ஓவியத்திலும்,
கடவுள் மறுத்து ஆரியம் எதிர்த்திட்ட
சமண தமிழ்த் தொண்டு
வட்டெழுத்திலும் சிற்பக் கலையுருவிலும்
தாங்குதெங்கள் மதுரை மலைகள்...
கல் திண்ணும் களவாணிகளுக்கு சாபச்
சங்காய் ஒலித்த
எங்கள் மலை கீழ் வாழ் மாமக்கள்
எம் மாமதுரையின் புதையல்கள்...
அச்சங்கின் எதிரொலியாய் ஒலிக்குதெங்கள்
பசுமைநடை...
நாற்பதாவது நிகழ்வு
******************************
பசுமைநடையின் நாற்பதாவது நடை;
Subscribe to:
Posts (Atom)